செம்மறியாடு  வளர்ப்பு 
          செம்மறியாடுகள் எல்லா தட்பவெப்ப  சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. அதிகளவு நிலம் கொண்டு பகுதிகளில் திறந்த வெளியில்  மேயவிட்டும், இடவசதி குறைவாக உள்ள இடங்களில் பட்டியலில் அடைத்தும் ஆடுகளை வளர்க்கலாம்.  குறைந்த செலவில் சிறு, குறு நில விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஆடு வளர்ப்பு  இலாபம் தரும் தொழிலாக விளங்குகிறது. 
          செம்மறி  ஆடு வளர்ப்பின் நன்மைகள் 
          
            
              - செம்மறி       ஆட்டிலிருந்து இறைச்சி, கம்பளம், தோல் எரு மற்றும் பால் மூலம் வருவாய் கிடைக்கிறது.
 
              - ஒரு       செம்மறி ஆடு ஒரு ஆண்டிற்று 500 முதல் 700 கிலோ எரு உற்பத்தி செய்கிறது.
 
              - செம்மறி       ஆடுகள் புல்லின் மேற்பகுதி மட்டும் மேய்வதால் மேய்ச்சல் தரைகள் அழிவதில்லை. மரங்களையும்       இவை அழிப்பதில்லை.
 
              - செம்மறியாடுகள்       மந்தையாகவே நடமாடுவதால் பராமரிப்பு எளிது. 100 ஆட்டிற்கு 1 நபர் போதுமானது.
 
              - அதிகச்       செலவில் கொட்டகைத் தேவையில்லை. திறந்தவெளிகளிலும் பட்டிகளிலும் வளர்க்கலாம்.
 
             
           
            
          மேலும் செம்மறி ஆடுகள் எல்லா  தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக. 
          
            
              - வெப்பப்       பிததேசங்களிலும் காணப்படும் ஆடுகள் உடல் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கம்பளமில்லாத       உரோமத்துடனும், நீண்ட கால்களுடனும், பெரிய வால், காது, கழுத்து அமைப்புக்களுடனும்       காணப்படுகின்றன.
 
              - குளிர்ப்       பிரதேசங்களில் உள்ள செம்மறி ஆடுகள் உரோமத்துடன் காணப்படுவதால் மழைத்தண்ணீர் உடலில்       பட்டு பாதிக்காதவாறு உள்ளன.
 
              - தீவனத்       தட்டுப்பாடு உள்ள பிரதேசங்களில் வாழும் செம்மறியாடுகள் தங்களுக்கு தீவனம் சரிவரக்       கிடைக்காத காலங்களில் உபயோகித்துக் கொள்வதற்காக கொழுப்புச் சத்தை தாங்கள் உடலில்       (வால்) சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை.
 
              - செம்மறி       ஆடுகளில் இறைச்சி அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.
 
              - சாதாரணமாக       1-2 குட்டிகள் ஈனும்.
 
              - இவை       வயல்வெளிகளில் மேயும் போது இதன் புழுக்கைகள் மற்றும் சிறுநீர் வயலுக்குச் சிறந்த       எருவாகப் பயன்படுகிறது.
 
             
           
          (ஆதாரம்: www.indg.in)  |